சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான வள்ளலார் இலக்கியப்போட்டிகள்.
இராமலிங்கர் பணிமன்றம் சார்பில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, இசைப் போட்டி ஆகியவை சோனா தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. மாநில அளவில் நடைபெற்ற “வளரும் சக்தி” என்ற இப்போட்டிகள், வள்ளலார் அவர்களின் கருத்துக்களை இளைய தலைமுரையினர், மத்தியில் பரப்பும் வகையில் அமைந்திருந்தது.
சேலம் மண்டலத்தின் மையமாக சோனா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 500க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். விழாவில் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின், துணைத் தலைவர் திரு.தியாகுவள்ளியப்பா, முதல்வர்.ஜெயப்பிரகாஷ், என்.ஜ.ஏ கல்வி நிறுவனங்கள் செயலாளர். ராமசாமி, ஆகியோர் பங்குபெற்று மாணவர்களை வாழ்த்திப்பேசினர். போட்டிகளை இராமலிங்கர் பணிமன்ற ஒருங்கிணைப்பாளர்களோடு, சோனா தமிழ் இலக்கிய மன்ற பொருப்பாளர்கள் இணைந்து நடத்தினர். போட்டியில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. சேலம் மண்டல அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.