NAAC-Accredited 'A' - Grade 2(f) & 12(B) status (UGC) |ISO
9001:2015 Certified | FIST Funded (DST) SIRO(DSIR)

Date/Time
Date(s) - 12/01/2023
10:30 am - 12:00 pm

Categories


தமிழ் மறை உழவர்களின் உயர்வையும் சிறப்பையும் எடுத்துரைக்கும் வள்ளுவரின் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.” என்ற வரிகளுக்கு ஏற்ப உழுதுண்டு வாழும் பழுதற்ற உழவர்களின் உழைப்பு திருநாளலே, தமிழர் திருநாளாம் தை திங்கள் முதல் நாளான பொங்கல் திருநாள் ஆகும் . இத்தகை சிறப்புமிக்க தமிழர் சமுகம் சங்கமிக்கும் திருநாளாம் பொங்கல் விழா சோனா தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பாக நம் கல்லூரியில் 2023,  மார்கழி 28, ஜனவரி 12ம் நாளன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஆசிரிய பெருமக்களும், அனைத்து மாணவர்களும், அலுவலக பணியாளர்களும் பங்கேற்று மகிழ்ந்தனர்.

நாம் வருடம் முழுக்க எத்தனையோ பண்டிகைகளை கொண்டாடினாலும், நமது வாழ்வியலோடு கலந்த ஒரு இனிய நாளாகவும், தமிழர்களுக்கே உரிய திருநாளாகவும் இருப்பது பொங்கல் திருநாளே. அத்தகைய பொங்கல் திருநாளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் நடைபெற்ற  பானை உடைத்தல், கயிறு இழுத்தல் மற்றும்  கோலப் போட்டிகளில்  ஆசிரியர்கள்  மாணவர்கள்  என அனைவரும் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

Related Post