Date/Time
Date(s) - 12/04/2024
10:00 am - 12:30 pm
Categories
சோனா தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக கலைவிழா- 2024 நிகழ்வானது 2024 ஆம் ஆண்டு பங்குனி 30, ஏப்ரல் 12 அன்று முதல்வர் முனைவர். செ.ரா.ரா.செந்தில்குமார் அவர்களின் வழிகாட்டுதலோடு நடைபெற்றது. சிறப்புமிக்க இவ்விழாவிற்கு தமிழ் மன்றத்தின் தலைமை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர். மா.ரேணுகா அவர்கள் தலைமை தாங்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் “தகடூர் தமிழன்” தங்கமுத்து அவர்கள் கலந்து கொண்டு “வானம் வசப்படும்” என்ற தலைப்பில் மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார். கலைவிழாவை முன்னிட்டு நடத்தபட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுககளை சிறப்பு விருந்தினர் வழங்கினார். சிறந்த துறைக்கான விருது கணினி அறிவியல் துறைக்கு வழங்கப்பட்டது. மேலும் பரதம், மற்றும் குழு நடனம் என பல பாரம்பரியமிக்க கலை நிகழ்ச்சிகள் இவ்விழாவில் நடைபெற்றன. இவ்விழாவில் ஏராளமான மாணவர்களும், மன்ற மாணவ உறுப்பினர்களும், ஆசிரிய பெருமக்களும், பங்கேற்றனர்.